54.KEELSAERI

29/12/2013

கீழ்சேரி - மதுராந்தகம் -முதுகரை -சித்தாமூர்-செய்யூரிலிருந்து 3 km ல் இவ்வூர் உள்ளது .செடி கொடிகளின் புதரில் சுவாமி அருள்பாலிக்கிறார் . காரைக்கால் அம்மையார் அப்பா என்று அழைத்த நம் சுவாமி எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

25/05/2014
அருள்மிகு வைத்தீசுவரர் திருக்கோவில் , கீழ்ச்சேரி

சிவபெருமான் தனிப்பெருங் கருணையினால் சுவாமி எடுத்து உயர்த்தி பிரதிஸ்டை செய்து , மேற்கூரை அமைத்து குட நன்னீராட்டு சிறப்பாக நடந்தேறியது .நம் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபையின் அமைப்பாளர் சிவ.கபாலிநேசன் ஐயாவின் வழிகாட்டுதல் படி சுவாமியின் திருஉருவப்படம் , நால்வர் , நந்திதேவர் அடங்கிய நீர்செல்லா வண்ணத்தாள் மேற்கூரையின் முன் ஒட்டப்பட்டுள்ளது . மேலும் மேற்கூரையின் சுற்றிலும் தகடு அடித்தல் , கதவு அமைதல் போன்ற சிறந்த செயல்களை கூறியும் , தற்போது ஒவ்வொரு மேற்கூரை அமைக்கும்போது அங்கு ஒரு மர கன்று நடவேண்டும் என்று கருத்தையும் கூறியுள்ளார்கள்  .மேலும் ஒலி பெருக்கி கருவியையும் வழங்கியுள்ளார்கள் .இவையெல்லாம் அவர்கள் சுவாமி மீது வைத்திருக்கும் அன்பை வெளிபடுத்துவதாக நாம் உணர்வோம் . இக்கீழ்ச்சேரி கிராமத்தில் அமைத்த மேற்கூரைக்கான திருப்பணி செலவில் Rs .14000 திரு .K.P.S .P .வடிவேல் முருகன் (USA) அவர்கள் நம் சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்  .

தொடர்புக்கு -சிவ .ரவீந்திரன் -9445728185 , சிவ .அனுமந்தன் -9585638101

i ) திருப்பணிக்குப் பின்பு
ii )
iii)
iv)
V)
VI)