112. KUPPAKKALMAEDU

குப்பக்கல்மேடு -
28/02/2016
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோவில் - சென்னையிலிருந்து காஞ்சிபுரம்-வெள்ளகேட்டு வலது பிரிந்து திருமாற்பேறு -சேர்ந்தமங்களம் -இடது பிரிவின் வழி நெமிலி சென்று பானாவரம் முன்பு உள்ள மலையின்மேல் சுவாமி அருள்பாலிக்கிறார் இன்று திருவருளால் நம்பெருமானுக்கு மேற்கூரை திருப்பணி செய்து வழிபாடு நடந்தேறியது.இத்திருப்பணிக்கு சிவத்திரு .கவிதா நாகராஜன் அவர்கள் ரூ.15000 வழங்கி உள்ளார்கள் .
தொடர்புக்கு- 9442973952


குறிப்பு-கூத்தவாக்கம் சிவாலயத்திருப்பணிக்கு கருங்கல் வேண்டி சோளிங்கர் செல்ல திட்ட மிட்டோம் அதன்படி செல்லும் போது திருவருளால் சிவ.சதாசிவம் ஐயாவின் கண்களுக்கு இம்மலை பார்வையில் பட இங்கு கல் வாங்கலாம் என்று நுழைந்தோம் அப்போது தான் சுவாமியை மலை மீது கண்டோம் பெருகிய ஆனந்தத்திற்கு அளவே கிடையாது .இவ்வூர் மக்கள்ளிடம் பேசி இரண்டு வார்த்தையிலே மேற்கூரை திருவருளால் அமைக்கப்பெற்றது . இங்குள்ள அமைதியும் ,தூய காற்றும்  நமக்கு மிகுந்த ஆனந்தத்தை தருகிறது.